மதுரை, ஜூலை 10 –
அண்ணாமலை புதிதாக ஆரம்பித்துள்ள வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான உறுப்பினர்கள் வருவார்கள் என்பதால் இன்றைய அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வி த லீடர்ஸ் முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரை மாநகர் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள பழமையான நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவிலில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர் க்கு 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். வி த லீடர்ஸ் இயக்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் விஷ்ணுபிரசாத், பிச்சைவேல், விவேக், அன்பில் நரேஷ், ஸ்ரீராம் கணேஷ், வைரமோகன், மாரியப்பன், வழக்கறிஞர் முருகன், முத்துராஜ், வழக்கறிஞர் ராஜசேகர், விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



