வேலூர், ஜூன் 19 –
வேலூர் அரியூர் வசந்தம் நகர் அருகே சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிர்வாகி உரிமையாளர் மணி என்பவர் பொதுமக்கள் போக வர செல்லும் 40 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு குறுக்கே கோயில் காம்பவுண்ட் கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இது குறித்து அப்பகுதி ஊர்ப் பொது மக்கள் அனைவரும் சேர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி கொடுத்துள்ளார்கள். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முறையான நடவடிக்கை எடுக்கக் கூறுகிறேன் என்று கூறினார்.