மார்த்தாண்டம், ஜூலை 22 –
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ. 25 லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் பள்ளியில் தேசிய மாணவர் படை தூப்பாக்கி சூடும் போட்டியில் தங்க மெடல் பெற்ற மாணவர்கள் தங்க மெடல் சான்றிதழ் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மூலம் கொடுத்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கே. பாலதண்டாயுதபாணி, கெ.ஆர். ராமன் அறக்கட்டளை கே.ஆர். ரங்கராஜன், தலைவர் நவீன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரவின் எட்வர்ட், டாக்டர் வம்சி மூர்த்தி, முன்னாள் பகுதித் தலைவர் அமோல் மற்றும் ரகுலன் சேகர் காங்கிரஸ் நிர்வாகிகள், பேச்சிப்பாறை நகர தலைவர் குமார், குலசேகரம் நகர தலைவர் வில்சன் மற்றும் திபாகர், விஜின், பள்ளி தலைமை ஆசிரியை சஜிதா உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.