புதுக்கடை, ஜூன் 29 –
புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜன் (57). இவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்துஸ்தான் லேட்டக்ஸ் ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது தாயார் சரஸ்வதி (78). இவர் வெள்ளையம்பலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். ராஜன் அடிக்கடி தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயாரை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதை எடுத்து நேற்று மதியம் வீட்டில் வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டு சமையலறையில் சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து உடனடியாக புதுக்கடை போலீசருக்கு தெரிவிக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


