புதுக்கடை, பிப். 25 –
புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரச குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கநாடார் (79). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவியின் ஞானம் என்பவர் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகள் உண்டு. மகள் குடும்பத்துடன் ஒடிசா மாநிலத்தில் வசித்து வருகிறார். எனவே தங்கநாடார் ஊரில் தனியாக குடும்ப வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடைசியாக 23ம் தேதி அன்று அவரை அக்கம் பக்கத்தினர் வெளியே பார்த்துள்ளனர். பிறகு அவரை காணவில்லை. இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தனர். அவரது வீட்டில் பார்த்த போது அவர் வீட்டு அறையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உறவினர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தவரின் அண்ணன் மகன் இம்மானுவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


