வேலூர், மார்ச் 12 –
கே.வி.குப்பம் ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய அரசு கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பில்லாந்திப்பட்டில் சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி பில்லாந்திப்பட்டு சுங்கச்சாவடி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய செயலாளர் லோ.ரவிச்சந்திரன் தலைமை வகிக்க மேற்கு ஒன்றிய செயலாளர் சீதாராமன் துவக்கி வைத்தும், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் முருகேசன் நிறைவு செய்தும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.



