பரமக்குடி, ஜனவரி 22 –
தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்க கோரி வரும் பிப்ரவரி 9 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலர்கள் விடுப்பு எடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்,
இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சிவசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழரசு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் இணைக்க கோரி தமிழக முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் கடந்த ஜனவரி 6 முதல் 13ம் தேதி முடிய சென்னையில் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்றி தருவதாக ஏற்றுக்கொண்டனர். பிப்ரவரி 9ந் தேதிக்குள் ஏற்றுக்கொண்ட கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.



