பா.ஜ.க மாநில நிர்வாகி சதீஸ்ராஜா மே தின வாழ்த்து செய்தி.
கன்னியாகுமரி மே 1
பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநில பொதுச்செயலாளர் சதீஸ்ராஜா வெளியிட்ட மே தின வாழ்த்து செய்தியில் ;
அனைவருக்கும் இலவச வீடு, தூய குடிநீர், கேஸ் இணைப்பு, வட்டியில்லா தொழில் கடன் என தொழிலாளிகள் வாழ்வாதாரம் உயர எண்ணிலடங்கா திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தந்துள்ளது.
தொழிலாளர்களின் பொருளாதாரம், உரிமைகள் தலைநிமிர்ந்து நின்றது பா.ஜ.க வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தான்.தொழிலாளர்களின் பொற்காலம் அது.
உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் , எந்த நிலைக்கும் உயர முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு நிரூபித்து கொண்டிருக்கிறது.
உழைக்கும் வர்க்கம் உயர வேண்டும்.அவர்களின் பொற்காலம் தொடர வேண்டும்.தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.