ஈரோடு, ஜூன் 16 –
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் நூற்றாண்டு விழா, மோடி அரசின் 11 ஆண்டு சாதனை விழா, அவசர நிலை பிரகடனம் 50 ம் ஆண்டு நிறைவு, உலக சுற்றுச்சூழல் தின விழா என ஐம்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எம். செந்தில் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி எம்எல்ஏ சி. சரஸ்வதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவர் ஆதித்யா கோகுல கிருஷ்ணன், கனகராஜ் தங்கவேல் தேசியக் குழு உறுப்பினர் வக்கீல் பழனிச்சாமி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காந்தி, எஸ்.ஏ. சிவசுப்பிரமணியம், செந்தில்குமார், வேதானந்தம், இமயம் சந்திரசேகர், கெளரிசங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் குணசேகரன், கிருஷ்ண வேணி, ரேவதி சக்திவேல், கமல முருகன் மற்றும் வக்கீல் ஈஸ்வர மூர்த்தி, பொதுச் செயலாளர்கள், புனிதம் அய்யப்பன், ராயல சரவணன், ஆறுமுகம், தொழில் பிரிவு மாவட்டத் துணை தலைவர் பாலமுரளி, பட்டியல் அணி மாநிலச் செயலாளர் அய்யாசாமி, மாவட்டச் செயலாளர்கள் சசிதயாள், சக்திவேல், செந்தில்குமார், சுகன்யா, நிரஞ்சனா, சரவணன், சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் சுதர்சணன், ஆன்மீகப் பிரிவு தலைவர் சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு தலைவர் செல்வமணி மற்றும் மண்டலத் தலைவர்கள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.