திருப்பூர், செப். 22 –
திருப்பூர் பிஜேபி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மக்களின் நலன் கருதி நாடு முழுவதும் ஒரே சீரான வரி GST நடைமுறைக்கு கொண்டு வந்ததோடு தற்போது நிறைய சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது என்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நிறைய பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விதிப்பு நீக்கப்பட்டுள்ளது என்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு கூட பத்து சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று திருப்பூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



