நாகர்கோவில் – அக் – 01,
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கட்டைக்காடு ஊரில் முட்டம் கடை வரம்பு சானல் கரையிலிருந்து நாகர்கோவில் – குளச்சல் செல்லும் மேற்கு கடற்கரை சாலையை இணைக்கும் சுமார் 100 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலை மிக மிக மோசமடைந்து குண்டும் குழியுமாக மேற்படி தார் சாலை ஆனது சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாழ் அடைந்துள்ளது. இச்சாலை சம்பந்தமாக பலமுறை புகார் மனு கொடுத்தும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் கனரக வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி மிக மிக சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால நடவடிக்கையில் பழுதடைந்த தார் சாலையையை உடனடியாக சரி செய்து தரும்படியும், மேலும் வெள்ளிமலை பேரூராட்சி 15 – வது வார்டுக்கு உட்பட்ட கட்டைக்காடு முட்டம் கடை வரம்பு சானல் கரை பொட்டல் குழி முதல் வெள்ள மோடி வரையுள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை அகற்றுவது சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு மக்களை தேடி முதல்வர் திட்டத்திலும் புகார் மனு கொடுத்தும் மேற்படி நபர் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவே பொட்டல் குழியில் இருந்து வெள்ளமோடி வரையும் தனிநபர் ஆக்கிரமிப்பை போர்க்கால அடிப்படையில் அகற்றித் தரவும் வெள்ளிமலை பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் தங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது .