நித்திரவிளை, ஜூன் 24 –
நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கடை நோக்கி கார் அதிவேகமாக சென்றது. கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்ற மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் இரண்டு துண்டாக உடைந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் காரின் முன் பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கார் மட்டும் நின்று உள்ளது. அதில் இருந்தவர்களைக் காணவில்லை. இதனால் விபத்து ஏற்படுத்திய காரில் எத்தனை பேர் வந்தனர், யார் யாருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.