நாகர்கோவில், ஜூன் 26 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே பாதைகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் நாகர்கோவில் அருகே உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் ரயில்வே சாலை பகுதியில் வருகின்ற போது சாலை முழுவதுமாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியதால் பாதை தெரியாமல் பறக்கின்கால் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும் முழுவதுமாக நீர் நிரம்பி சென்றதால் கார் மூழ்கி பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் காரில் மூழ்கிய நபர்களை மீட்டு கரை சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர். மேலும் கார் முழுவதுமாக கால்வாயில் மூழ்கி மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்த காரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.