நாகர்கோவில், ஜூலை 16 –
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அவை தலைவர் எஃப்.எம். ராஜரத்தினம், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜோசப் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.