திருப்பத்தூர், ஜூலை 21 –
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகஸ்ட் 7-ம் தேதி வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் திருப்பதி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய அவைத் தலைவர் குமார், ஒன்றிய பொருளாளர் கார்த்திக், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வினோத், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் திருப்பதி, வெங்கடேசன், அண்ணாமலை, ஒன்றிய நிர்வாகிகள் கண்ணதாசன், சிவக்குமார், ஊராட்சி கழக செயலாளர்கள் சுரேஷ், சுப்புரு, குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணை C.S. சரவணன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்தி, கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் யோகநாத், வடக்கு ஒன்றிய செயலாளர் குணபாலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுகு ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அதிகமான தொண்டர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர்.



