தேனி, ஜூன் 18 –
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கோடாங்கிபட்டியில் தனியார் நிறுவனமான காலம் ஃபர்னிச்சர் தனது ஆறாவது கிளையை இன்று திறந்து வைத்தது. இந்த நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கடையின் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடை உரிமையாளர் நிதிஷ், தங்க தமிழ்ச்செல்வனுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் அவரின் சந்திப்பை நினைவுபடுத்தும் புகைப்படம் பரிசாக வழங்கினார். இதைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்க தமிழ்ச்செல்வன் நான் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது கலாமை சந்தித்த பொற்கால நினைவுகள் இன்று மீண்டும் மனதில் வந்து நிற்கின்றன என்று கூறினார். பின்னர் கடையில் வைக்கப்பட்டுள்ள பர்னிச்சர் பொருட்களை நேரில் பார்வையிட்ட தங்க தமிழ்ச்செல்வன், நிதிஷுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து கிளைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் காலம் ஃபர்னிச்சர் நிறுவனம் இப்போது தேனியிலும் தனது சேவையை விரிவாக்கியுள்ளது.