தென்காசி, ஜூன் 10 –
தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நூலகத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நூலகத்தினைப் பார்வையிட்டனர் நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.