தூத்துக்குடி, செப். 8 –
தூத்துக்குடி மாவட்டம் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து நடத்தும் உயர்வு படி இரண்டாம் முகாமில் தூத்துக்குடி ஊரகம், நகரம், ஓட்டபிடாரம் வட்டாரங்கள் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை ஆர்வமும் பயின்று 2024-25 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மாணவர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் க. இளபகவத் கலந்துரையாடி தொழில்நுட்ப படிப்பு, கல்லூரி தேர்வு செய்தல், தொழிற்பயிற்சி படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்ந்த படிப்பு, தொழில் பயிற்சி கல்வி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) தி. புவனேஷ் ராம், கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



