திருப்பூர், ஆக. 19 –
மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே “நிறைந்தது மனம்” நிகழ்ச்சி குறித்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் 24.03 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர்.
ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பணிமனையில் 43 நகரப்பேருந்துகளும், திருப்பூர் பணிமனை 2-யில் 27 நகரப் பேருந்துகளும், பல்லடம் பணிமனையில் 51 நகரப்பேருந்துகளும், காங்கேயம் பணிமனையில் 45 நகரப்பேருந்துகளும், தாராபுரம் பணிமனையில் 31 நகரப் பேருந்துகளும், உடுமலைப்பேட்டை பணிமனையில் 57 நகரப்பேந்துகள் என மொத்தம் 254 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி திட்டத்தின் கீழ் நான்காண்டுகளில் 24,03,65,275 நபர்கள் பயணம் செய்துள்ளனர். அதில், திருப்பூர் மாவட்ட பணிமனையின் கீழ் இயங்கும் 254 நகர பேருந்துகளில் 23.87,88,112 மகளிர்களும், 14,85,846 மாற்றுத்திறனாளிகளும், 91317 மூன்றாம் பாலினத்தவர்களும் பயனம் செய்துள்ளார்கள்.
பெண்களின் வேலை பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பது பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும். பெண்களுக்கு அவர்களின் உயர் கல்வித் தேவைகளை எளிதாக்குவதற்கும் பொருளாதார ரீதியாக பங்களிப்பதற்கும் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பான பயணங்கள் வழங்கப்படும். இது அவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் அரசின் சிறந்த திட்டமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்கள்.
ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த திருமதி அம்பிகா தெரிவிக்கையில்: எனது பெயர் அம்பிகா, நான் ஊத்துக்குளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் திருப்பூரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது வீட்டில் இருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று வர நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை செலவாகும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வரும் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் தினமும் வீட்டிலிருந்து வேலைக்கு நகரப்பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகிறேன். இதனால் மாதம் ரூ.1,200 சேமிக்க முடிகிறது. எனது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை நானே பூர்த்தி செய்து வருகிறேன்.
மேலும், மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு சிறப்பு திட்டமாகும். இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.



