சிவகங்கை, அக்டோபர் 7 –
சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர். (பொ) மானாமதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்புவனம், நெல்முடிக்கரை, பொட்டபாளையம் மற்றும் திருப்பாசேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள் 09.10.2025 தேதி வியாழக்கிழமையன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அந்த வகையில் திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், பிரமனூர், அல்லிநகரம், சொக்கநாதிருப்பு, கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி,
கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், அதிகரை, வடகரை, பூவந்தி, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி,
செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு தஞ்சாகூர் ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கண்டவாறு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் விநியோகம் இருக்காது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



