By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
தமிழ்நாடுதிண்டுக்கல்மருத்துவம்

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

Last updated: November 11, 2025 5:16 pm
November 11, 2025
24 Views
Share
SHARE

திண்டுக்கல், நவ. 11 –

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாநில பொது செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் திருலோகசந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கார்த்திகேயன், லலித்குமார், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மகளிர் அணி செயலாளர் ரேகா உட்பட ஏராளமான மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மாநில பொது செயலாளர் டாக்டர் சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நான்கு பழைய மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை.

குறிப்பாக ஜெய்கா திட்டத்தின் கீழ் பல நூறு கோடிகளில் சென்னை, கோயமுத்தூர், சேலம், திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கட்டிடங்களில் துறைகளை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணியிடமும் இதுவரையில் உருவாக்கப்படாமல் உள்ளது. அதேபோன்று வேலூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இங்கும் இந்த மருத்துவமனைகளை நிர்வாகிப்பதற்கு எந்த ஒரு மருத்துவப் பணியிடமோ செவிலியர் பணியிடமோ, பணியாளர்கள் பணியிடமோ இதுவரை உருவாக்கப்படவில்லை.

பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதேபோன்று கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும், பெரியார் நகர் மருத்துவமனையிலும் எந்த ஒரு பணியிடங்களும் உருவாக்கப்படாமல் பிற மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இங்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதே போன்று எந்த ஒரு புதிய பணியிடங்களும் உருவாக்கப்படாமல் புதிய மருத்துவமனைகள் துவக்கப்படுவதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

தற்பொழுது ஆட்குறைப்பு செய்யப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி ஆட்குறைப்பு செய்வதாக கூறுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி பார்க்க வேண்டிய வெளி நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைகள், பிரசவங்கள் ஆகிய குறியீடுகளில் அந்த விதிகளை விட சுமார் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக பார்க்கப்படுகிறது.

உதாரணமாக 100 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ள மருத்துவ கல்லூரிக்கு 420,படுக்கைகள் இருந்தால் போதும் . ஆனால் நூறு எம்பிபிஎஸ் சீட்டுகள் கொண்டுள்ள மருத்துவமனையில் சுமார் 800 லிருந்து 1000 படுக்கைகள் உள்ளன. அதேபோன்று நூறு எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தினசரி 800 புற நோயாளிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் தினசரி சுமார் 2000 புறநோயாளிகள் சராசரியாக இந்த மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

மருத்துவர்கள் நோயாளிகள் சராசரி என்று எடுத்துக் கொண்டால் கூட நமது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவர்கள் குறைவாகவே உள்ளனர். 24ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 12000 மருத்துவர்கள் மட்டுமே தற்போது மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறார்கள். தற்பொழுது குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் நடத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயலாகும்.
இதனால் மருத்துவர்கள் மட்டுமல்ல, ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி தான் தற்பொழுது மருத்துவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள் என்று அரசு கூறுமானால், தேசிய மருத்துவ ஆணையப் பணிகளில் வராத குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், மாற்றுத் திறனாளி முகாம்கள், விஐபி கான்வாய் டூட்டி, மெடிக்கல் போர்டு, நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற அனைத்து முகாம்கள், கோர்ட் டூட்டி போன்றவற்றை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இனி மேல் புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் வேறு வழி இன்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு தள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாநில பொது செயலாளர் டாக்டர் சீனிவாசன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
35 – வது மாவட்ட மாநாடு குறித்துஆலோசனைக் கூட்டம்
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி அருகே டெம்போ மோதி தொழிலாளி படுகாயம்; டிரைவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட

August 21, 2024
122 Views
துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
சர்வதேச சுத்த சன்மார்க்க மாநில மாநாடு
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account