வேலூர், செப். 11 –
எடப்பாடி பழனிசாமி போற போக்கில் ஏதோ பேசுகிறார். பாவம் ஏதாவது பேச வேண்டும் என பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் காட்டம்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: அதிமுக ஒற்றுமையாக தான் இருப்பதாகும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அவர் எங்களுக்காகவா பேசுவார் அவர் அவருக்காக தான் பேசுவார்”.
பழிவாங்கும் நோக்கோட திமுக செயல்படுவதாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்கள் அரசியலில் சர்வீஸ் இல்லை”.
தமிழகத்தில் நிரந்தர எதிரி திமுக தான் என கூறி வருகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என்று”.
அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு” என்று கூறினார்.
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வேண்டிய பணமெல்லாம் ஒதுக்கியாச்சு விரைவில் துவக்க விழா செய்வோம்.
சிறப்பு வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் நடைபெற உள்ளது குறித்து கேட்டதற்கு,
“தமிழகம் பிகார் அல்ல. தமிழகம் விழிப்புணர்வு பெற்ற நாடு. அங்கு உள்ள ஆட்சி இங்கு அல்ல, இங்கு உள்ள ஆட்சி தளபதி ஆட்சி. அந்த பம்மாத்து எல்லாம் தமிழகத்திலும், தளபதியிடமும் செல்லாது” என கூறினார்.
சட்டமன்றத் தேர்தலுக்குள் திமுக கூட்டணி சிதைந்து விடும் என எடப்பாடி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போற போக்கில் ஏதோ பேசுகிறார். பாவம் ஏதாவது பேச வேண்டும் என பேசுகிறார்”.
தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு 1500, 2000 கோடி என வழங்கி வருகிறார். தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என பாரத பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படி தான் நினைப்பார் போல என தெரிகிறது” என அவர் கூறினார்.



