தருமபுரி, ஜுன் 2 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா சிட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வேண்டி ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், தனித்துணை ஆட்சியர் செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தினர்.



