தருமபுரி, ஆகஸ்டு 13 –
தருமபுரி கடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய ஸ்ரீ மருத வானேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 49-ம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதவானேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோவிலுக்கு பூ கரகம், மாவிளக்கு எடுத்துக்கொண்டு பம்பை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். தீச்சட்டி, காளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிறகு சக்தி அழைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வருகின்ற வியாழக்கிழமை 14/8/2025 அன்று வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்ற தலைப்பில் மாபெரும் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை 15/8/2025 அன்று 509 பெண்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. சனிக்கிழமை 16/8/2025 அன்று அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் ஆராதனையும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



