தருமபுரி, அக்டோபர் 06 –
தருமபுரி மாவட்டம் இலக்கியம் பட்டியில் உள்ள சாலை மாரியம்மன் திருக்கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஊர் மக்களிடம் தகவல் அளித்து விட்டு கோயிலை திறந்துள்ளனர். அப்போது சாமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி உட்பட சுமார் 4 1/2 பவுன் நகை திருடியுள்ளனர். இதேபோல் அருகில் உள்ள புத்துநாதர் கோயிலில் இரும்பு கேட்டை உடைத்து பார்த்ததில் கோயிலில் ஏதும் இல்லததால் சென்றுவிட்டனர்.
அதனையடுத்து அமுதம் காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கோயில் வெளியே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். தொடர் திருட்டையடுத்து தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருகே உள்ள சிசிடிவி கேமராவை பார்வையிட்டும், கை ரேகை நிபுணர்களை வரவழைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



