தருமபுரி, ஜூன் 16 –
தருமபுரியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டப் பொருளாளர் வே.தங்கமணி, 22- வது வார்டு உறுப்பினர் டீ. அல்லிராணி தங்கமணி ஆகியோர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆ. மணி எம்.பி இலவச கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தும் , அன்னதானத்தையும் வழங்கினர். முன்னாள் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மே. அன்பழகன், கௌதம், மாதேஸ்வரன், சுகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.