செங்கல்பட்டு, ஜூலை 02 –
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது) பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
வங்கியானது இரண்டு புதிய கிளைகள் காயரம்பேடு செங்கல்பட்டு மாவட்டம், மல்லேஸ்வரம் பெங்களூரு ஆகிய இடங்களில் ஏடிஎம் / சிஆர்எம் வசதியுடன் துவக்கியுள்ளது. காயரம்பேடு செங்கல்பட்டு மாவட்டத்தில் 584-வது கிளையை நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ் துவக்கி வைத்தார்.
மல்லேஸ்வரம் பெங்களூருவில் 585வது கிளையை பெங்களூரு H.R.B. குழுமத்தின் தலைவர் ஜெய்ராஜ் துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல தலைவர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் கூறுகையில், வங்கியானது இரண்டு புதிய கிளைகள் காயரம்பேடு செங்கல்பட்டு மாவட்டம், மல்லேஸ்வரம் பெங்களூரு ஆகிய இடங்களில் ATM / CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது.
இந்த வங்கியானது இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 585 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.tmb.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.