வேலூர், ஜூலை 11 –
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மாண்புமிகு திருமதி. மதுமதி இஆப அவர்களை சந்தித்து தமிழகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு நிலவும் பல்வேறு கோரிக்கை மனு கொடுத்து வாழ்த்துக்கள் பெற்றனர். அருகில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் தலைவர் ர. பழனிசாமி, துணைத் தலைவர் சிக்கந்தர் ராபர்ட், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், துணை செயலாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் டென்சிங், செயற்குழு உறுப்பினர் மணிவாசகி ஆகியோர் உள்ளனர்.