வேலூர், ஜூன் 17 –
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் துணை சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத் தலைவராக R.பழனிசாமி, துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக G ஜெய்சங்கர், பொருளாளராக டென்சிங் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒருவர் செயற்குழு உறுப்பினராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 4% இட ஒதுக்கீட்டின்படி வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.