உசிலம்பட்டி, செப். 23 –
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொடையம்பட்டி பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பயணம் செய்யும் நிலையில் உள்ளது. மேலும் இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் சேடப்பட்டி வேளாண்மை துறை அலுவலகம் பேரையூர் தாலுகா அலுவலகம் போன்றவற்றிற்கு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகின்றனர்.
இதனை அறிந்து திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான காடையாம்பட்டி தடயம் பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம்
துணை மேலாளர் சதீஷ்குமாரிடம் நேரில் சந்தித்து பொதுமக்களின் சார்பாக கோரிக்கை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட துணைப் பொது மேலாளர் சதீஷ்குமார் வெகு விரைவில் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.



