தஞ்சாவூர், செப்டம்பர் 24 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 22 கோடியில் 4 சமூக நீதி கல்லூரி மாணவ மாணவியர்கள் விடுதி களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 4 சமூக நீதி விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சமூகநீதி கல்லூரி மாணவி விடுதிக்கு 100 மாணவிகள் தங்கி கல்வி பயல ஏதுவாக ரூபாய் 5 கோடியே 6 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடமும், திருவையாறு இசை கல்லூரி மாணவர்கள் சமூக நீதி விடுதியில் 100 மாணவர்கள் தங்கி கல்வி பயில வகையில் ரூபாய் 3 கோடியே 85 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிடமும் கட்டப்பட உள்ளது.
மேலும் ஒரத்தநாடு கல்லூரி மாணவிகள் சமூக நீதிவிடுதியில் தங்கி கல்வி பயிலும் வகையில் ரூபாய் 7 கோடி யே 98 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிட மும், ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி விடுதியில் 100 மாணவி கள் தங்கி கல்வி பயில ரூபாய் 5 கோடியே 28 லட்சம் மதிப்பில் சொந்த கட்டிடம் என மொத்தம் ரூபாய் 22 கோடி 17 லட்சம் செலவில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டிடத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் நாட்டினார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, பொதுப் பணித்துறை கட்டிட செயற் பொறி யாளர் நாகவேல், பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் ஸ்ரீதர், வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



