தஞ்சாவூர் மே 16
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 89.07சதவீத மாண வ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 12,815 மாணவர் களும் 14 ஆயிரத்து 542 மாணவி களும் என மொத்தம் 27 ஆயிரத்து 357 பேர் தேர்வு எழுதினர். இவர் களில் 10,684 மாணவர்களும், 13 ஆயிரத்து 683 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 367 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .தேர்ச்சி விகிதம் 89.07 சதவீதம்.
இது கடந்த ஆண்டு விட நிகழாண்டில் 1.02 சதவீதம் குறைவு. இதே போல் மாநில அளவிலான தேர்ச்சி விகிதப்பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 23 வது இடத்தில் இருந்த நிலையில் நிகழாண்டு 27ஆம் இடத்திற்கு குறைந்துள்ளது.
நிகழாண்டில் மாணவர்கள் 83.37% பேரும் மாணவிகள் 94.09% தேர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் அறிவியல் பிரிவில் 93.73 சதவீதம் பேரும்,வணிகவியல் பிரிவில் 82.88 சதவீதம் பேரும் கலை பிரிவில் 64.32 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 97.04 சதவீதம் பேரும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் 96.18 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 95. 09 சதவீதம் பேரும் சமூக நல பள்ளிகளில் 90.32 சதவீத பேரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 87.84 சதவீதம் பேரும் அரசின் முழு உதவி பெறும் பள்ளிகளில் 86 சதவீதம் பேரும் அரசு பள்ளிகளில் 83.35 சதவீதம் பேரும், மாநகராட்சி பள்ளிகளில் . 80.85 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.