தஞ்சாவூர், ஜூலை 24 –
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாநகர வாசகர் வட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்புரையாற்றினார். மாநகர வாசகர் வட்ட தலைவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி இராஜேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். பெரியார் படிப்பக இயக்குநர் முனைவர் ந. எழிலரசன், படிப்பக பொருளாளர் முனைவர் வே. ராஜ வேல், வாசகர் வட்ட புரவலர் பொறியாளர் கோ. ரவிச்சந்திரன், வாசகர் வட்ட துணைத்தலைவர் வெ. துரை, வாசகர் வட்ட துணைச் செயலாளர் ச. விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் அ. ஜேம்ஸ் உரையாற்றினர்.
தஞ்சை மாநகர வாசகர் வட்ட புரவலர் பேராசிரியர் உரு. ராஜேந்திரன், தஞ்சை மாநகர வாசகர் வட்ட புரவலர் மயக்கவியல் மருத்துவர் த. அருமைக்கண்ணு ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர். படிப்பக செயலாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றி குமார் இணைப்புரை வழங்கினார். திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் படிப்பகப் புரவலர் மு. அய்யனார், மாநகர வாசகர் வட்ட புரவலர்கள் பொறியாளர் பா. சிவானந்தம், பேராசிரியர் ப. திருநாவுக்கரசு, மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாநகரத் தலைவர் படிப்பகப் புரவலர் செ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அ. அருணகிரி, மாநகர செயலாளர் படிப்பக தலைவர் இரா. வீரக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் பா. சிவானந்தம் பிள்ளை & சன்ஸ் சீனிவாசன், பேராசிரியர் ப. திருநாவுக்கரசு ஆகியோர் விடுதலை வாசகர் வட்டப் புரவலர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழ் அய்யா கந்தசாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டனர். வாசகர் வட்ட அமைப்பாளர் மு. செந்தில் குமார் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், படிப்பக நிர்வாகி ஆ. பிரகாஷ் செந்தாமரைச் செல்வி, குழந்தைசாமி, எஸ்.என். குசலவன், கவிஞர் பகுத்தறிவு தாசன், மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.