தஞ்சாவூர் மே 14
ஆண்டுதோறும் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த நாளை ஒட்டி உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன்படி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழாவில் செவிலி யர்கள் மாணவிகள் பங்கேற்ற பேரணியினர் நடைபெற்றது. இந்த பேரணியைமருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிலையை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செவிலியர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
இதேபோல் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவுக்கு செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) சசிகலா தலைமை வகித்தார் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வளர்மதி சிறப்புரையாற்றினார் மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். செவிலிய கண்காணிப்பாளர் பரிதா பேகம், சித்ரா, சங்கத் தலைவர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.