கோவை, செப். 23 –
கோவை மாவட்டம் சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் சுப்பிரமணியம், துணைத் தலைவர்கள் செல்வராஜ், இளங்கோவன், தங்கராஜ், சசிகுமார், செயலாளர்கள் முருகேசன், உமரி கணேஷ், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசுப் பொதுமக்களின் வரி சுமையைக் குறைக்கும் பொருட்டு நான்கு அடுக்காக இருந்த அதிகப்படியான பொருள்களுக்கு 5% மற்றும் 18% என்று அதிக அளவிலான பொருள்களுக்கு வரியை குறைத்தும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பல்வேறு உணவுப் பொருள்களுக்கும் வரி விலக்கும் அறிவுத்தமைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பல்வேறு அத்தியாவசியப் பொருள்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்தியமைக்குக் கண்டனம் தெரிவித்தும் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்து வரும் நம் இந்தியாவில் பதிலடியாக நாமும் பொதுமக்களும் இணைந்து அமெரிக்கப் பொருள்களை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் நிறுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளமானத் தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் நிலை நிறுத்திட சபதம் எடுக்கப்பட்டது. சூலூர் பகுதியில் செமி கண்டக்டர் தொழில் வளர்ச்சிக்குத் திட்டம் போட்டு செயல்படுத்த உள்ள மாநில மத்திய அரசுகளை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



