சிவகங்கை, ஜூன் 24 –
சிவகங்கை அரசனேரி கீழமேடு கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவா பாய்ஸ் மற்றும் மாஸ்டர் ரகுபதி நினைவுக் குழுவின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜே.பர்வேஸ், மாவட்டச் செயலாளர் எஸ். முத்து பாரதி, ஒன்றியச் செயலாளர் பரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்கள். பின்பு அங்குள்ள முதியோர்களுக்கு வேட்டி, சேலைகளையும் இனிப்புகளையும் வழங்கினார்கள். விழாவின் நிறைவாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசனேரி கீழமேடு கிளையின் சார்பில் கௌரவ தலைவர் பி. ராமராஜன், தலைவர் பி. பிரபு, செயலாளர் பி. மனோஜ்குமார், துணைச் செயலாளர் பி. பிரசாந்த், பொருளாளர் பி. மனோகரன், துணைப் பொருளாளர் பி. அமலேஷ், மகளிர் அணியின் சார்பில் பஞ்சவர்ணம், லதா, இந்திரா, முத்துலட்சுமி, மலர்விழி, மல்லிகா, கௌதமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.