சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ளது டி.புதூர் கிராமம் இந்த டி.புதூர் கிராமத்தில் உள்ளடங்கி இருக்கிறது. கிருஷ்ணா நகர் 5 – வது தெரு இந்த தெரு வழியாகத்தான் சிவகங்கை ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ரயில் நிலையத்திற்கு இந்த வழியாகத்தான் தினமும் நடந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த ஆண்டுதான் தார்ச்சாலை போடப்பட்டது ஆனால் தார் சாலை போடப்பட்ட 3 – மாதத்திலேயே அவை அனைத்தும் பெயர்ந்து விட்டது. இந்த பிரச்சினை குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்களிடமும் சிவகங்கையில் இப்போது யூனியன் சேர்மனாக இருக்கும் மஞ்சுளா பாலச்சந்தர் அவர்களிடமும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் இப்பகுதி மக்கள் புகார்களை அளித்துள்ளனர் இது வரை புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். மேலும் இது குறித்து இந்த தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் ஒருவரை கேட்டபோது அவர் கூறியதாவது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே இந்த சாலை இருக்கிறது இந்தச் தார் சாலை போட்ட மூன்று மாதத்திற்குள்ளேயே அனைத்தும் பெயர்ந்து விட்டது காரணம் தரமான சாலையை அமைக்கவில்லை எல்லா மாட்டத்திலும் லஞ்சம் தலை விரித்து ஆடுவதால் தரமான சாலை அமைவதில்லை என்று கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் அதிக கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்த சாலையை மீண்டும் புதிதாக அமைத்து பொது மக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics