திருப்பூர், ஜூன் 25 –
வேதாந்தா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகத் தலைவர் மோனி மற்றும் தங்கம் அவர்களும் ஏற்பாடு செய்தனர். முதல்வர் அனுராதா யோகாசனப் பயிற்சிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். யோகாசனப் பயிற்சியாளர் தியாகு பயிற்சி செய்யும் முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தார்கள். யோகாசனப் பயிற்சியாளரும் கின்னஸ் சாதனையாளருமான டாக்டர் சிவானந்தம் மாணவ மாணவிகளுக்கு யோகாசனத்தையும் பெற்றோர்களுக்கு மூச்சு பயிற்சி பற்றிய விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார். பள்ளியில் உள்ள அனைவரும் யோகாசனத்தை செய்து மகிழ்ந்தனர்.



