சென்னை, ஜுன் 9 –
நெடுஞ்சாலைகள், பொதுப்பணிகள், உள்ளிட்ட துறை சார்ந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட உயர் நிலை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அறிவிக்கப்பட்டத் திட்டங்கள் எதையும் தாமதமின்றி நடைமுறைக்குக் கொண்டு வர அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார். மேலும், திட்டத்தின் செயலாக்க முன்னேற்றம் தொடர்பாக நேரடி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.