தென்காசி, ஜூலை 4 –
தென்காசி வடக்கு திமுக சார்பாக சங்கரன்கோவிலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில், மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு தமிழகம் முழுவதும் ஓரணியில் மக்களை ஒற்றுமையாக திரட்ட வேண்டும் என்ற முனைப்பில் தீர்மானத்தை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களை ஓர் அணியில் அதிக அளவு சேர்க்கவும். தமிழ்நாடு மக்கள் சுதந்திரம், சுயமரியாதை கொள்கைகளை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணா பெரியாரை அவமதிக்கும் பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசு நிதி கொடுக்க விட்டாலும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எந்தவித பாதிப்பும் இன்றி நிதி வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை கேட்பதற்கு அதிமுகவிற்கு திராணி இல்லை. சீரடி ஆராய்ச்சி தமிழக அரசு நிதியுடன் நடத்தப்படும். தமிழ்நாட்டில் 72 மாவட்டங்களில் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை காக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மகத்தான திட்டமான ஒரணியில் தமிழ்நாடு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் பல்வேறு கருத்துக்களை ராஜா எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், தலைமை கழக பேச்சாளர் ராம், தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். மற்றும் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி, பாண்டியன், தேவதாஸ், சாகுல் அமீது, பராசக்தி, மகேஸ்வரி, மாரிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், பொன் முத்தையா, பாண்டியன், மாவட்ட இளைஞரணி முகேஷ், மாணவர் அணி உதயகுமார், வர்த்தக அணி முனியசாமி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜலால் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வார்டு கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



