வேலூர், ஆகஸ்ட் 06 –
குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கண்டித்து குடியாத்தம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழக வெற்றி கழகம் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீரான் குதுப்சா கண்டன உரையாற்றினார். முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ், பாபு, இளங்கோ, மது தாஸ், மணிகண்டன், ராஜ்குமார், சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



