ராமநாதபுரம், ஆக. 18 –
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை அனைத்துக் கிளைகள் சார்பாக 79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 17.08.2025 அன்று மாபெரும் இரத்ததான முகாம் கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சத்தார் அலி, மாவட்ட துணைச்செயலாளர் தினாஜ்கான் மற்றும் கீழக்கரை அனைத்துக் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் 10 பெண்கள் உள்பட 51 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர். மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் ஹாஜா சம்சுதீன் இரத்ததான முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். இரத்ததான முகாமில் கலந்து கொண்ட மாற்று மத அன்பர்களுக்கு திருமறை குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



