கருங்கல், மார். 2 –
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் வைத்து கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட கலை பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜேந்திர ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் பாலூர் தேவா, துரைராஜ், தங்கத்துரை, அணிகளின் அமைப்பாளர்கள் அனுலால்டோம், பெஜன் சிங், பால்பிரபுல்சிங், டிக்சன் மற்றும் கிளை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



