கிருஷ்ணகிரி, அக். 14 –
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் கம்பன் கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்புகள் 14.10.2025 முதல் தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளியில் தொடங்கப்பட்டது. மு.ஸ்ரீரங்கன் வரவேற்புரை ஆற்றினார். கம்பன் கழக தலைவர் முனைவர் இ.ரவிந்தர் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பை கண்காணித்தார். சிறப்பு விருந்தினராக சீனிவாசா கல்வி மையம் தலைவர் முனைவர் ஜெ.பாலாஜி சிறப்புரை ஆற்றினார். இப்பயிற்சி வழங்க பயிற்சியாளர் தகடூர் தமிழ் கதிர் மற்றும் குரு டாக்டர்.மதுமொழி ஆனந்த் அவர்கள் திருக்குறள் பயிற்சி மாணவ மாணவிகளுக்கு அளித்தனர்.



