கிருஷ்ணகிரி, ஜுன் 24 –
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பணியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜெகதாப் ஸ்ரீ மங்கள மஹா பிரத்தியங்கிரா காளி பீடம் டிரஸ்ட், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஜெகதாப் சக்தி ஸ்ரீ பிரகாஷ் சுவாமிகள் ஏற்பாட்டில் ரெட் கிராஸ் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் எஸ். மதியழகன் ஆகியோர் முன்னிலையில் முகாமினை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் எஸ்.என்.நிஷி தலைமையில் மருத்துவக் குழுவினர் பொது மக்களை பரிசோதித்து கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.