களியக்காவிளை, ஜூன் 26 –
களியக்காவிளை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அஜ்மல் (24) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். நேற்று கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த உமர்கான் மகன் ஷாபி (19) என்பவர் ஓட்டலுக்கு வந்தார். திடீரென அஜ்மல் இடம் தகராறு ஈடுபட்டார். ஹோட்டல் உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார்.
எனினும் ஆத்திரத்தில் இருந்த ஷாபி தனது நண்பர்களான கேரளா மாநிலப் பகுதியை சேர்ந்த அருள் (20 ), ஆனந்த் (19) மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகியோருடன் மீண்டும் ஓட்டலுக்கு சென்று அங்கிருந்த அஜ்மலை நான்கு பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். அங்கு இருந்தவர்கள் அஜ்மலை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் ஷாபி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.