ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 26 –
கலசலிங்கம் பல்கலை என்.எஸ்.எஸ், ஒய்.ஆர்.சி குழு மற்றும் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் முனைவர் எஸ்.பி. பாலக்கண்ணன் மற்றும் கலசலிங்கம் பார்மசி கல்லூரி முதல்வர் முனைவர் என். வெங்கடேசன் துவக்கி வைத்தனர்.
230-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இரத்த தானம் வழங்கினர்.
பல்கலை வேந்தர் இரத்த தானம் வழங்கியவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பேராசிரியர்கள், முனைவர்கள், டி. ராஜ்பிரதீஷ், ஜி. கலசுரமன், சந்தன குமார், மி.வி. தினேஷ் குமார் மற்றும் மாணவர்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



