பல்லடம், அக்டோபர் 16 –
பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த சர்வதேச அளவிலான பயிற்சி பட்டறையில் கற்றல் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவின் கம் தாக் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறையின் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவார்ந்த முறைகளின் வாயிலாக ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச பயிற்சி பட்டறை ஆன்லைனில் நடைபெற்றது.
டெம்பிள்யோர்க் நிறுவனத்துடன் பல்லடம் அரசு கல்லுாரி இணைந்து நடத்திய நிகழ்வை கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்பு செய்தார். கம்ப்லியாருக்கு நிறுவனத் தலைவர் டாக்டர் வசந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி பட்டறையில் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கிரீஸ், குவைத், பிரேசில், பெரு, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்று செயற்கை நுண்ணறிவில் மனித பங்கு பெறல் மற்றும் சமூக நெறி முறைகள் குறித்து பேசினர்.
இதன் மூலம் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில், நுண்ணறிவின் செயற்கை முக்கிய குறித்தும் பங்களிப்பு விளக்கினர். கற்றல் செயல் முறைகளை மேம்படுத்தும் விதமாக பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 75 பயிற்சி பட்டறையில் பங்கேற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினர். டாக்டர் திப்பு சுல்தான் டெம்பிள்யோர்க் இந்து ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


