மதுரை, செப். 20 –
மதுரை விரகனூர் சுற்றுச் சாலை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பா. சந்திரன்
மற்றும் திமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பாச பிரபு
ஆகியோரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விழா அரங்கில் மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப் பாண்டியன் ஏற்பாட்டில்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையிலும், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனபால் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கிருத்திகா தங்கபாண்டி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சிவகாசி வனராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர ஏர்போர்ட் பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக கிளைச் செயலாளர் பா. சந்திரன், மாவட்ட பொருளாளர் கொம்பாடி தங்கம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பாச பிரபு, மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் தமிழ் ராஜா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா பீமன், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



