தேனி மாவட்டம்
கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அறங்காவலர் உறுப்பினர். கே ராமசாமி தேவர் ஜெயரத்தினமாள் நினைவாக தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் குழு உறுப்பினர் கே . ஆர். ஜெயபாண்டியன் கலைவாணி குடும்பத்தார் சார்பில் வருடம் தோறும் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம்.இதனைத் தொடர்ந்து இந்த வருடம் கோவில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சி வழக்கம்போல் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த அன்னதான விழாவை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். காலை முதல் மாலை 3 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான விழாவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை சிறப்பித்தனர். இதில் அனைத்து சமுதாய பெரியோர்களும் பக்த கோடிகளும் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள்,விழா கமிட்டி உறுப்பினர்கள்,கோவில் பூசாரிகள்,திருக்கோவில் சிறப்பு பணியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகப் பணியாளர்கள், என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். இந்த அன்னதான விழா ஏற்பாட்டுனை கே.ஆர். குடும்பத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.